<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.2.1" -->
<rss version="0.92">
<channel>
	<title>மடத்துவாசல் பிள்ளையாரடி</title>
	<link>http://www.vaasal.kanapraba.com</link>
	<description>கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்</description>
	<lastBuildDate>Thu, 15 Jul 2010 11:04:00 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் பேசுகிறார்</title>
		<description>"உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது" எழுபதுகளில் ஆரம்பித்து இன்றும் நம்மவர் நெஞ்சங்களில் மெல்லிசையாய் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். இந்த ஈழத்து மெல்லிசைப்பாடலுக்குப் பின்னால் அந்தக் காலத்தில் புகழ்பூத்து விளங்கிய எம்.பி.பரமேஷின் எழுத்தாக்கமும், குரலினிமையும் இணைந்திருக்கின்றது. ஈழத்துப் படைப்பாளிகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஈழத்து மெல்லிசை மன்னன் எம்.பி.பரமேஷ் அவர்களை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வானலையில் சந்தித்தேன். ஈழத்தின் முக்கியமானதொரு இசைக்கலைஞனின் வாழ்வின் பெரும்பகுதியை வானலை வழியே ...</description>
		<link>http://www.vaasal.kanapraba.com/?p=100</link>
			</item>
	<item>
		<title>ஈழத்துத் தமிழ்சினிமா மீது ஞாநி எறிந்த கல்</title>
		<description>"கலைத்துறையைப் பொறுத்தமட்டில் 1983-ல் இனக்கலவரங்கள் வெடிப்பதற்கு முந்திய அமைதிக்காலகட்டத்தில் கூட ஈழத்தமிழர்களிடமிருந்து ஒரு உருப்படியான சினிமா முயற்சி கூட நடந்ததில்லை.  அதே சமயம் சிங்களப்படைப்பாளிகள் உலகத்தரத்திலான திரைப்படங்களை உருவாக்கியிருக்கின்றார்கள். ஈழத்து சினிமா படைப்பாளிகளுக்கு தமிழகத்தின் மசாலா படம் தான் ரோல் மாடலாக இருந்திருக்கின்றது"  
மேற் சொன்ன கருத்துக்களை தனது குமுதம் "ஓ பக்கங்களில் எழுத்தாளர் ஞாநி 09.06.2010 தேதியிட்ட இதழில் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கருத்தை இன்று தான் ...</description>
		<link>http://www.vaasal.kanapraba.com/?p=99</link>
			</item>
	<item>
		<title>LP Records சுழற்றும் நினைவுகள்</title>
		<description>சமீபத்தில் ஒரு நாள் நான் வழக்கமாகப் போகும் சிட்னியின் வீடியோ சக ஓடியோ கடைக்குப் போய் அங்கே புதிதாக வந்திருந்த சரக்குகளை மேய்ந்து கொண்டிருந்தேன். அந்தக் கடைக்காரர் இந்தியாவில் இருந்து புதிதாக ஏதாவது டிவிடி மற்றும் ஓடியோ சீடிக்களை வாங்கவேண்டும் என்றால் மறக்காமல் என்னிடமும் ஒரு பட்டியலைக் கேட்டு வாங்கிவிடுவார். அதில் பாதியாவது அடுத்த கப்பலில் வரும் என்ற நம்பிக்கையும் எனக்கு. இப்படியாக நான் அந்தப் புது ஓடியோ சரக்குகளில் ...</description>
		<link>http://www.vaasal.kanapraba.com/?p=98</link>
			</item>
	<item>
		<title>வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு</title>
		<description>"பூக்கடைக்கும் விளம்பரம் தேவை தானே" என்பவர்கள் சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் "ஜோதி ஸ்டோர்ஸ்" புஷ்பக்கடை விளம்பரத்தைக் கைகாட்டுவார்கள். இன்று நேற்றல்ல வானொலி ஊடகம் ஆரம்பித்த காலம் தொட்டே விளம்பரதாரர்கள் இந்த ஒலி ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இன்றைக்குப் பெரும்பாலான வானொலிகளில் முக்கியமான பாடல் நிகழ்ச்சிகளில் கூட விளம்பரத்தின் ஆக்கிரமிப்பில் பாடல்கள் துண்டாடப்படும்.

அகில இந்திய வானொலி நிலையத்தை விட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரத்தின் செல்வாக்கு மிகையாக இருந்ததற்கு முக்கிய ...</description>
		<link>http://www.vaasal.kanapraba.com/?p=97</link>
			</item>
	<item>
		<title>வெந்த மண்ணில் என்ன விடுப்பு?</title>
		<description>

பதுளை, வெலிமட, மஹாநுவர,
தம்புல்ல, குருநாகல, வியங்கொட,
பொலன்னறுவ, கடவத்த, கெக்கிறாவ,
குளியாப்பிட்டிய, கொஹ_வல, றம்புக்கன

வழித்தடம் மாறிய வண்டிகள் எங்கும்
பழிகிடக்கின்றன ‘யாப்பன’ பார்க்க!

நகரத்துத் தெருக்களிலும் 
நாகவிகாரை முன்னும் 
நல்லூரான் வீதி தொட்டு 
நாவாந்துறை வரையும் 
வண்ண வண்ண வண்டி அணி 
வந்து நிக்குது
கண்ணிரண்டும் கண்டு கண்டு 
வலி எடுக்குது!

கொய்த கனிகளொடு 
கொய்யாக் கனிவகையுமு;
வேர்க்கடலை, சோளம்,
விறகு, பலகை, முகம் -
பார்க்கும் கண்ணாடி, 
பற்றறி, மின்சாதனங்கள்
பிளாஸ்ரிக்கில் பூவும், 
பிரமிக்கும் பாத்திரங்கள்
கண்டகண் மற்றொன்றும் காண முடியாது -
திண்டாட, யாழ்ப்பாணத் ...</description>
		<link>http://www.vaasal.kanapraba.com/?p=96</link>
			</item>
	<item>
		<title>பக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம்  &#8220;தீட்சண்யம்&#8221;</title>
		<description>நாங்கள் பேசுவதில்லை
               அதனால்
நாங்கள் ஊமைகளென்பதல்ல

நாங்கள் பேசுவதில்லை
               ஏனெனில்
நீங்கள் ஊமையாகி விடுவீர்களென்பதால்

               ...</description>
		<link>http://www.vaasal.kanapraba.com/?p=95</link>
			</item>
	<item>
		<title>விதியைத் துரத்திய குட்டியானையின் கதை கேளுங்கோ</title>
		<description>சிட்னி Taronga மிருகக்காட்சிச்சாலைக்காரருக்கு இரட்டிப்புக் கொண்டாட்டம். இருக்காதா என்ன, சில மாதங்களுக்கு முன்னர் தான் அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய யானைக் குட்டி “Luk Chai" ஐ ஈன்றெடுத்த மண் என்ற பெருமையோடு லுக் சாயை சீராட்டிப் பாராட்டி வளர்த்து வரும் வேளை இன்னொரு குட்டியும் இன்னும் சில மாதங்களுக்குள் பிறக்கப் போகிறதே என்ற இன்னொரு இனிப்பான செய்திதான் அது. இப்போது வளர்ந்து வரும் Luk Chai இன் தாய்க்காரி ...</description>
		<link>http://www.vaasal.kanapraba.com/?p=94</link>
			</item>
	<item>
		<title>வரியப்பிறப்பு வந்துட்டுது&#8230;..</title>
		<description>புதுவருசம் பிறக்கப் போகுதெண்டா ஊரிலை இருக்கிற குஞ்சு குருமானுகளுக்கு மட்டுமே கொண்டாட்டம், பெரியாக்களுக்கும் தானே. வருசப்பிறப்பிறப்புக்கு முதல் இரண்டு மூண்டு நாட்களுக்கு முன்னமே எங்கட வீட்டிலை குசினி (அடுக்களை) அடுப்பு எல்லாம் சாணத்தாலை மெழுகி, மச்சப்பாத்திரமெல்லாம் மீன் வெடுக்குப் போக சாம்பலால் தேச்சுக் கழுவி பின் பக்கம் இருக்கிற அறைப்பக்கமா கவுட்டு வச்சிடுவா அம்மா. அப்பாவின்ர வேலை தூசி தட்டி, எல்லா அறையும் கழுவி வச்சிடுவார். வீடு காயும் மட்டும் ...</description>
		<link>http://www.vaasal.kanapraba.com/?p=93</link>
			</item>
	<item>
		<title>அருட்செல்வம் மாஸ்டர் வீடு</title>
		<description>"அம்மோய்! அருச்செல்வம் மாஸ்டர் வீட்டை போட்டுவாறன்" பள்ளிக்கூடத்தால் வந்த களைப்பை முகம் அலம்பி தண்ணி தெளிச்சுக் கலைத்த பின்னர் உடையை மாற்றிக் கொண்டே ஓடுகிறேன் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூசனுக்கு. இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னர் என் ஆரம்ப வகுப்பு நாட்களின் தினசரி வாடிக்கை இது.  இந்த ஓட்டம் எனக்கு மட்டுமல்ல, ஒத்த அயற்கிராமத்தில் வாழ்கின்ற பள்ளிப்பிள்ளைகளுக்கும் ஒரு வாடிக்கையாய் போய் விட்ட நிகழ்வு இது.

"இரா. அருட்செல்வம்" இந்த மந்திரச் ...</description>
		<link>http://www.vaasal.kanapraba.com/?p=92</link>
			</item>
	<item>
		<title>சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ</title>
		<description>சொந்த நாட்டில் வாழ்வைத் தொலைத்து, கடல் கடந்த நாடுகளுக்கு பாதுகாப்பான வாழ்வைத் தேடி ஓடி அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழ்ச்சமுகம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமது புலம்பெயர் வாழ்வைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் நம் புலம்பெயர் சமூகத்தை எட்ட நின்று பார்ப்பவனுக்கு அக்கரைப் பச்சையாய் இருக்கும். ஆனால் அனுபவித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை இலக்கியமாகவும், திரைப்படங்களாகவும் படைத்திருப்பதோடு பாடல்களாகவும் வந்து புலம்பெயர் வாழ்வியலின் யதார்த்தத்தைக் காட்டியிருக்கின்றன. அப்படியானதொரு படைப்பு ...</description>
		<link>http://www.vaasal.kanapraba.com/?p=91</link>
			</item>
</channel>
</rss>
