தங்கம்மா அப்பாக்குட்டி என்றதோர் ஈழத்தின் ஆன்மீகச் சொத்து, ஆருமில்லாப் பெண்களின் ஆறுதற் சொத்து, நேற்று சிவபூமியாம் ஈழபதி யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.தனது எண்பத்து நாலு வயது வரை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தைத் தன் ஆன்மீக நிலைக்களனாகவும், ஆதரவற்ற பெண்களின் புகலிடமான துர்க்கா மகளிர் இல்லத்தைத் தனது அறத்தின் நிலைக்களனாகவும் வைத்து அறத்தொண்டாற்றிய பெருந்தகை அவர். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் அவரது பிறந்த இடமான தெல்லிப்பழையில் இன்று நடைபெற்று தெல்லிப்பழை கட்டுப்பிட்டி மயானத்தில் தகனக் கிரிகைகள் நடைபெற்றிருந்தது.
ஈழத்தில் பிறந்த எவருமே தங்கம்மா அப்பாக்குட்டி என்னும் இந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஆன்மீகச் செம்மலைத் தெரியாமல் வாழ்ந்திருக்க முடியாது. அவரது சொற்பொழிவுகளும், சைவ சமயப் பாடநூல்களிலும், ஆன்மீக இதழ்களிலும் கொடுத்த அவர் தம் கட்டுரைகளும் இன்னும் என்னைப் போன்ற பலர் நெஞ்சில் பசுமரத்தாணியாய் இருக்கும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட இந்தச் சிவத்தமிழ்ச் செல்வியின் நினைவுப் படையலாக அவர் ஆற்றிய சொற்பொழிவுப் பேழையில் இருந்து “தாயான இறைவன்” என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.
இன்று திங்கட்கிழமை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி சிறப்பு அஞ்சலி நிகழ்வைத் தொகுத்து வழங்கியிருந்தேன். அதில் பங்கேற்று அஞ்சலிப் பகிர்வை வழங்கியோர்:
* ஆன்மீகப் பேச்சாளர் திருமதி வசந்தா வைத்தியநாதன்,
* அபயகரம் ஆதரவற்றோர் உதவி அமைப்பின் நிறுவனர் திரு சிவானந்தன்,
* யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ்,
* சிட்னி வாழ் சைவத்தமிழ் அறிஞர் திரு.திருநந்தகுமார்,
* கம்பவாரிதி இ.ஜெயராஜ்,
* ஈழத்தமிழர் கழகம் அமைப்பின் தலைவர், மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம்
* வானொலி மாமா திரு மகேசன் அவர்கள்
* திருநெறிச்செல்வர், சிவத்தமிழ்ச்செல்வியின் வழிகாட்டலில் ஆன்மீக, அறப்பணி ஆற்றிவரும் ஆறு திருமுருகன் அவர்கள்
அந்த நிகழ்ச்சியின் ஒலித் தொகுப்பைக் கேட்க (அளவு: 1 மணி நேரம் 30 நிமிடங்கள் 31 செக்கன்)
யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வழங்கும் சிவத்தமிழ்ச்செல்வியின் இறுதி நிகழ்வின் தொகுப்பும், அஞ்சலிப்பகிர்வும்
அமைதியும் அருளும் பொலியும் முகம். இத்தனை நாள் இவரது சிவச் சொற்பொழிவுகளைக் கேளாமல் போனேனே.
சைவச் செம்மல்கள் அனைவரும் நம்மை விட்டுப் போகிறார்களே…அடுத்து எவரிடம் சென்று சொற்பொழிவுகளைக் கேட்பது!!!!
இந்த பொழுதில் இவரைக் கேட்க நேர்ந்ததே!
அவருடைய ஆன்மா சிவபதம் அடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வணங்குகிறேன்.
ம்ம்ம்ம்….
யாழ்ப்பாணத்தின் மறக்க முடியாதவர்களுள் இவரும் ஒருவர்…
ஈழத் தமிழர்களின் தனித்துவத்தை வெளிகாட்டும் முகமான எம்மவர்களின் சிறப்பினை உலகறிய வைக்கும் உங்கள் முயற்சி என்றுமே பாராட்டுக்குறியதே.
இவரது சொற்பொழிவை இதுவரை நானும் கேட்டதில்லை.
உங்களின் முயற்சியால் இன்று எனக்கும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. என்னைப்போன்று இன்னும் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
நன்றி
// G.Ragavan said…
சைவச் செம்மல்கள் அனைவரும் நம்மை விட்டுப் போகிறார்களே…அடுத்து எவரிடம் சென்று சொற்பொழிவுகளைக் கேட்பது!!!!//
உண்மைதான்!
சொற்பொழிவினை இங்கு பதிவிலேற்றி பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றிகளுடன்..!
இன்று நானும் காலை செய்திதாளில் படித்தேன். அவரின் ஆத்மா ஷாந்தி அடையட்டும்.
//G.Ragavan said…
அமைதியும் அருளும் பொலியும் முகம். இத்தனை நாள் இவரது சிவச் சொற்பொழிவுகளைக் கேளாமல் போனேனே.
சைவச் செம்மல்கள் அனைவரும் நம்மை விட்டுப் போகிறார்களே…அடுத்து எவரிடம் சென்று சொற்பொழிவுகளைக் கேட்பது!!!!//
வணக்கம் ராகவன்
அம்மாவின் பெருமைகளை இதுவரை அறியாத உங்களைப் போன்ற அன்பர்களுக்காக அவரின் சொற்பொழிவொன்றை இட்டிருக்கின்றேன். நீங்கள் சொன்னது போல் இப்படியான ஆன்மீகச் சொத்துக்கள் பல நம்மிடமிருந்து போவது வருத்தமளிக்கும் செய்தி.
// தமிழன்… said…
ம்ம்ம்ம்….
யாழ்ப்பாணத்தின் மறக்க முடியாதவர்களுள் இவரும் ஒருவர்…//
வருகைக்கு நன்றி தமிழன்
// HK Arun said…
உங்களின் முயற்சியால் இன்று எனக்கும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. என்னைப்போன்று இன்னும் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.//
மிக்க நன்றி அருண்
வருகைக்கு நன்றிகள் ஆயில்யன் மற்றும் மயூரேசன்
எங்கள் வாழ்வின் வழிகாட்டிகளூள் இவரும் ஒருவர்.இன்னும் வாழ்ந்திருக்கலாம்.எங்கள் யாழின் ஒரு அற்புத அம்மையார்.அவரது ஆத்மா எங்களை வழிநடத்தி அமைதி காக்கும்.பிரபா, பல ஆண்டுகளுக்குப் பின் அவரது சொற்பொழிவைக் கேட்டேன் உங்கள் தயவில் நன்றி.
வணக்கம் ஹேமா
“சிலர் வாழும்போதே செத்துப்போனவர்களாக யாருக்கும் பயனில்லாமல் இருப்பார்கள், சிலர் இறந்த பின்னும் உயிரோடு இருக்கும் படி போல் நிலைத்து இருப்பார்கள்”
இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் திருநந்தகுமார் அவர்கள் இப்படி சொன்னது அம்மையாருக்கும் மிகப்பொருத்தம்.
Dear Praba Anna thanks for your valuable services. I am in jaffna now. I have created the blogspot for me. I don’t know how to use the tamil fonts for my page. Could u explain me how to use the tamil fonts in the blog. Thankin you
yours sincerly
umesh
வணக்கம் உமேஸ்
எங்களூர் உறவை வலைவழி காண்பது மட்டற்ற மகிழ்வைத்தருகிறது. எனது மின்னஞ்சல் முகவரியான kanapraba@gmail.com இற்கு ஒரு மடல் போடுங்கள் விபரமாகச் சொல்லித் தருகின்றேன். அத்தோடு உங்கள் பதிவை தமிழ்மணத்திலும் சேர்க்க உதவுகின்றேன்.