ஈழத்து பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் மாரடைப்பால் 28-01-08 திங்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார். முன்னர் உதவி அரசாங்க அதிபராக பணி புரிந்தவர் என்பதோடு ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோகளில் ஒருவராகவும் விளங்கியவர். சிறுகதை,நாவல், நாடகம், சினிமா என பல்துறையிலும் ஈடுபாடுகொண்டு கட்டுரைகள், நேர்காணல்கள், விமர்சனங்கள் என பல பத்திரிகைகளிலும் எழுதி வந்தவர். ஈழத்தில்
மட்டுமல்லாது தமிழகத்திலும் பல ஆண்டுகள் கலைப்பணியாற்றியவர்.
தழிழ்த்தேசியத்திலும் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்ட இவர். ஐந்து தடவைகள்
இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசு பெற்றவர். தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியாலும் பாராட்டும் பரிசும்
பெற்றவர். இதுவரை எண்பத்திநான்கு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
செ.யோகநாதன் நூல்கள்
யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
அசோகவனம் (சிறுகதைகள், 1998)
செ.யோகநாதன் அவர்களின் திடீர் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். எமது மாணவப் பருவத்தில் கல்லூரி நூலகங்களின் மூலம் எமக்கு இலக்கியப் பசியைத் தணித்தவர்களில் ஒருவர் அல்லவா அவர்.
நேற்று (ஜனவரி 30, 2008) செ.யோகநாதன் அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றதோடு அன்னாரின் இலக்கிய நினைவு நிகழ்வும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
செ.யோகநாதன் குறித்து இரண்டு நினைவுப்பகிர்வுகளை, செ.யோகநாதன் அவர்களின் அஞ்சலிக்கூட்டத்தினைத் தொடர்ந்து எடுத்திருந்தேன். அவற்றின் ஒலியும் வடிவையும், செங்கை ஆழியான் வழங்கும் கருத்துக்களின் எழுத்து வடிவையும் இங்கே தருகின்றேன்.
கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கும் நினைவுப்பகிர்வு
இவர் ஒரு சில கதைகள் படித்த ஞாபகம்; குறிப்பிடும்படியான எழுத்துப் பாணி இவரது, புலம் பெயர் வாழ்வில் மீள்வாசிப்புக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய் விட்டது.
உங்களிடம் இருந்தால் உங்களுக்கு மிகப்பிடித்ததை பதிவாக்கவும்.என்போன்றோருக்கு சந்தர்ப்பமாக அமையும்.
தொகுப்புக்கு நன்றி
அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.
பதிவுக்கு நன்றிகள்
கானா,
செ.யோகநாதனின் மறைவு , எழுத்துலகிற்கு பெரும் இழப்பே, ஆழ்ந்த வருத்தங்களும் அஞ்சலியும்.
அவரது படைப்புகள் முன்னர் சோவியத் இருந்த போது வந்த மொழிப்பெயர்ப்பு வடிவிலும் வந்துள்ளது, நியு செஞ்சுரி பதிப்பகம் மூலம்.சிலது படித்தும் உள்ளேன்.
வணக்கம் யோகன் அண்ணா
செ.யோகநாதனின் சிறுகதை ஒன்றை இந்த வார இறுதிக்குள் இட முயற்சிக்கின்றேன்.
சின்னக்குட்டி வருகைக்கு நன்றி
//வவ்வால் said…
கானா,
செ.யோகநாதனின் மறைவு , எழுத்துலகிற்கு பெரும் இழப்பே, ஆழ்ந்த வருத்தங்களும் அஞ்சலியும்.//
வருகைக்கு நன்றிகள் நண்பா